தற்போது சினிப் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். இவரிரிடம் ஒருவர் நிர்வாண புகைப்படத்தை பதிவிடுமாறு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழில் ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார்.
தற்போது பிரபாஸுடன் ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார் பூஜா ஹெக்டே. அப்போது ரசிகர்கள் கேட்கும் புகைப்படங்களை பதிவிடுவதாக தெரிவித்திருந்தார்.
அதில் ரசிகர் ஒருவர் தங்களது நிர்வாண புகைப்படத்தை பதிவிடுமாறு கேட்டிருந்தார். இதற்கு தனது கால்கள் மட்டும் தெரியும் வகையில் ஒரு புகைப்படத்தை பதிவிட்ட பூஜா ஹெக்டே “வெறும் கால்கள்” என குறிப்பிட்டு அவருக்கு நெத்தியடி பதில் கொடுத்தார்.