சொந்தவீடு கட்டுவதற்காக இரும்பு பெட்டியில் 5 லட்ச ரூபாயை சேர்த்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை கரையான் அரித்துவிட்டதால் ஒரு குடும்பமே கண்ணீர் கடலில் தத்தளித்து வருகிறது.
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மைலவரம் பகுதியைச் சேர்ந்த பன்றி மேய்த்து பிழைப்பு நடத்திவந்த ஜமாலியா என்பவர் அதன் மூலம் கிடைத்த வருவாயை சிறுக சிறுக இரும்புப் பெட்டியில் சேமித்து வந்துள்ளார்.
சொந்தவீடு கட்ட வேண்டும் என்ற கனவை நனவாக்குவதற்காக கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாய் வரை சேமித்து வைத்திருந்தார்.
அவர் சேமித்த இரும்பு பெட்டியை நெடுநாட்களாக திறக்காமல் இருந்ததால் பணத்தை கரையான் அரித்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.
அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளார். கண்ட கனவை நிறைவேற்ற சேமித்து வைத்த பணத்தை கரையான் அரித்து விட்டதால் அரசு அவருக்கு இழந்த பணத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.