நம்மோடு வாழ்ந்து நம்மை விட்டும், இவ்வுலகத்தை விட்டும் பிரிந்த நம் உறவுகளுக்காக நாம் என்ன செய்கிறோம்??
ம்ம் யோசித்து பார்த்து நாம் சொல்லும் பதில்....
பிரார்த்தனை செய்கிறோம், தான தர்மங்கள் செய்கிறோம், வருடா வருடம் அவர்கள் நம்மை விட்டு பிரிந்த நாளை உறவுகளோடு இணைந்து நினைவு கூறுகிறோம், முடிந்தால் அவர்களின் கல்லறைக்குச் சென்று ஒரு மெழுகுவர்த்தியோ, அல்லது ஒரு தீபமோ ஏற்றிவைப்போம். ஆம் நாம் இவற்றைத் தான் செய்கிறோம்.
ஆனால் மரித்தவரை மிக வித்தியாசமாக நினைவு கூரும் இவர்களைப் பாருங்கள்....
இந்தோனெஷியாவின் டொராஜா எனும் கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் தங்கள் மூதாதையரை எவ்வாறு நினைவு கூறுகிறார்கள் தெரியுமா? ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் தங்கள் மரித்த உறவுகளின் கல்லறைகளுக்குச் சென்று அவர்களின் உடல்களை எடுத்து சுத்தம் செய்து, புது ஆடைகளை அணிவிக்கின்றனர், குழந்தைகள் எனின் புது ஆடைகள் அணிவிப்பதோடு, விளையாட்டு பொருட்களையும் அருகில் வைத்து மீண்டும் புதைக்கிறார்கள்.
இதனை இவர்கள் வழக்கப்படுத்தி கொண்டுள்ளனர். வியக்கவைக்கும் இந்த பழக்கவழக்கத்தை இவர்கள் தங்களின் கடமை என கருதுகின்றனர். இந்த படங்களையும் பாருங்கள்...