வெலே சுதா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வாவுக்கிடையேயான தொடர்பு குறித்து காவற்துறை ஊடக பேச்சாளரின் அறிக்கை அரசியல் சேறு பூசும் செயல் - விசாரணைகளில் உண்மை வெளிவந்தது. - வெலே சுதா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வாவுக்கிடையேயான தொடர்பு குறித்து காவற்துறை ஊடக பேச்சாளரின் அறிக்கை அரசியல் சேறு பூசும் செயல் - விசாரணைகளில் உண்மை வெளிவந்ததுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,510 Views
தேசிய நிறைவேற்று சபையில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இதனை தெரியப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் துமிந்த சில்வா மற்றும் வெலே சுதாவுக்கிடையே தொடர்பு இருந்ததாக காவற்துறை ஊடக பேச்சாளர் வெளியிட்ட அறிக்கை, அரசியல் சேறு பூசும் செயல் மாத்திரமே என உறுதியாகியுள்ளது.
அண்மையில் தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு தலைவர் மேல் மாகாண சபை உறுப்பினர் மனோ கணேஷன் ஊடகங்களுக்கு வெளியிட்ட உறுதிப்படுத்தல்கள் மூலமும் இந்த விடயம் தெளிவானது.
தேசிய நிறைவேற்று சபை நடப்பு அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது.
வெலே சுதா தொடர்பான விசாரணை குறித்து தேசிய நிறைவேற்று சபையில் தகவல்களை சமர்பிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன காவற்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனடிப்படையில் நிறைவேற்று சபையின் ஒரு சந்தர்ப்பத்தில், வெலே சுதா தொடர்பில் கருத்துக்களை அறிந்து கொள்ள மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர அழைக்கப்பட்டிருந்தார்.
வெலே சுதா தொடர்பான காவற்துறை விசாரணையின் முன்னேற்றம் இதன்போது கோரப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா தொடர்பான வெலே சுதாவின் வாக்கு மூலம் குறித்த தற்போதைய நிலவரம் என்னவென்று நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க இதன்போது கேள்வி எழுப்பினார்.
இதன்போது, கருத்து வெளியிட்ட சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர, வெலே சுதா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வாவுக்கிடையேயான உறவு குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து குறித்த தகவல், எந்தவித சாட்சியமும் அற்ற உண்மைக்கு புறம்பானது என்றும் தெளிவான அரசியல்சேறு பூசும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.
இதனை அடுத்து கருத்து வெளியிட்ட, தேசிய நிறைவேற்று சபையின் உறுப்பினர் விக்ரமபாகு கருணாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா தொடர்பில் சாட்சியங்களை ஆராய்வதற்கு முன், காவற்துறையினர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கருத்து கூறுவது பாரிய தவறு என தெரிவித்தார். அது நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஏற்பட்ட பாரிய அநீதி என்றும் அவர் குறிப்பிட்டார்.
காவற்துறையின் கருத்தையடுத்து, நாட்டில் பாரிய சர்சைக்குரிய நிலைமை ஏற்பட்டதுடன் மக்கள் மனங்களில் பிழையான கருத்தை கொண்டு சென்றுள்ளதாகவும் விக்ரமபாகு கருணாரத்ன சுட்டிக்காட்டினார்.
நாட்டில் தவறான கருத்தை தோற்றுவித்த காவற்துறை அதனை மீண்டும் நியாயப்படுத்த ஏன் தவறுகிறது? என பிரதி காவற்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் தேசிய நிறைவேற்று சபையில் விக்ரமபாகு கருணாரத்ன நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா மற்றும் வெலே சுதாவுக்கிடையேயான தொடர்பு குறித்து எந்தவித சாட்சியமோ அல்லது தகவலோ இல்லை என தற்போது உறுதியாகியுள்ளது.
இதுதவிர, இந்த கருத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வாவிடம் 4 நாட்கள் நாளொன்றிற்கு 8 மணித்தியாலம் சீ.ஐ.டி மேற்கொண்ட விசாரணைகளின் போது வெலே சுதா என்பவரை ஒருபோதும் சந்தித்ததும் இல்லை அவர் தொடர்பில் அறிந்திருக்கவில்லை என்றும் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.
மனோ கணேஷன் ஹிரு 'ஹார்ட் டோக்' நிகழ்ச்சியில் வெளியிட்ட உறுதிப்படுத்தல்கள்...