சினிமாவுலகில் யாரும் நிரந்தர நண்பருமில்லை, அதேபோல நிரந்தர எதிரியுமில்லை என்பது நிதர்சனமான உண்மை. மறுப்பதற்கும் முடியாது. அந்தளவுக்கு, அடிக்கடி நிகழ்ந்தேறும் சர்ச்சைகள் சான்றாக அமைந்து விடுகின்றன.
இந்த செய்தியின் அடிப்படையில், விஜய் தனது படத்துக்கு புலி என பெயர் சூட்டிய மறு கணமே, தனது பெயரிடப்படாத படமாக இருந்து வந்த படத்துக்கு பாயும் புலி என பெயரிட்டார் நடிகர் விஷால். ஏதோ, அவருக்கு மனதில் பட்டுள்ளது போல என பலரும் நினைத்து விட, அங்கேதான் ஆப்பு தயாராகியுப்பது பலருக்கு புரியவில்லை.
அதாவது, விஜய்க்கும் விஷாலுக்கும் என்ன சம்மந்தம்? அவர் வேறு.. இவர் வேறு...!! பிறகென்ன என்பதாக நீங்கள் பார்க்கலாம். இல்லைங்க, விஜய்யை பல சந்தர்ப்பங்களில் சாருக்க வைப்பதற்கான நடவடிக்கைகளில் விஷால் ஈடுபட்டு வருகிறார் என்கின்றனர் கோடம்பாக்க அலசல்காரர்கள்.
என்ன காரணமாக இருக்குமென பலரும் குழம்பும் நிலையில், நாங்க கண்டு பிடித்தோம் காரணம்! ஒரு தடவை, விஜய்யின் சித்தி மகன் நடிகர் விக்ராந்த் விஜய் அண்ணனாக எனக்கு செய்த உதவிகளை விட, என் நண்பனாக விஷால் எனக்கு செய்த உதவிகள் பெருமைக்குரியவை, மறக்க முடியாதவை என, மேடையில் வைத்து அம்பலப்படுத்தியிருந்தார். இது அவர்களுடைய நட்பை வலுப்படுத்தும் பேச்சு என்பதை விட, விஜய்யை கேவலப்படுத்தும் பேச்சு என்பது, அப்போது இருந்த அனுமானிகளுக்கு தெரியும்.
சரி !! அதுக்கும் இதுக்கும் என்ன முடிச்சு? குழப்பமா இருக்கா? வேணாம் குழம்பாதீங்க. அதாவது, நடிகர் மற்றும் விஷாலின் நண்பரான விக்ராந்த் சினிமா வாய்ப்பில்லாமல் இருக்கும் பொழுது, பலரிடமும் உதவியை நாடினார் கிடைக்கவில்லை. ஆனாலும், நண்பர் விஷால் தன்னால் முடிந்த உதவிகளை செய்து தோள் கொடுத்தார். ஆகவே, விஷாலை தலையில் வைத்து கொண்டாடினார் விக்ராந்த். அதே போல, எல்லோரோடும் சேர்த்து விஜய்யை அவரும் கழுவி ஊற்றினார்.
இப்பொழுது, அந்த கோபத்தையும் சேர்த்தே, விஷால், மீண்டும் விஜய்யுடன் மோத ஆரம்பித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. விஜய்யின் புலி படத்தோடு தான் தனது பாயும் புலி படத்தையும், வெளியிடுவது என விஷால் முடிவு செய்துள்ளதாக அறிய முடிகிறது.
ஆக, என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்த்து அறிந்து கொள்வோம்! அதுவரைக்கும் கிடைக்கும் தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் நாங்கள் தருவோம் !!
-கோடம்பாக்கக் குருவி-