இலங்கையின் பௌத்த தர்மத்துக்கு அமைய சிறிய வன்முறைகள் கூட இல்லாமல், எழுதுகருவியின் மூலம் வாக்கு பலத்தின் ஊடாக ஜனவரி 8 ஆம் திகதி அதிகாரம் மாற்றப்பட்டது
எனினும் அதனை கொள்ளையடிக்க இறுதிநேரத்தில் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது என்று வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தாம் செய்த முறைப்பாட்டுக்கு இணங்க விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்தநிலையில் தமது முயற்சியால் இலங்கையின் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டதாக முன்னாள் இராணுவ தளபதி கூறியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.