ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் என்ற தகவல் வெளியாகியிள்ளது.
இத்தகவல் இன்னும் உறுதிப்படுத்தபடாத நிலையில் அக்கட்சி இதனை மறுத்துள்ளது.சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பாவே இத்தகவலை மறுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் என தாம் ஏற்கனவே தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.ம.சு.கூட்டமைப்பின் பிளவு தொடர்பில் இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகிவரும் செய்திகளில் உண்மையில்லையெனவும் , இவ்வாறான செய்திகளை அவை வெளியிடுவதற்கான நோக்கம் என்னவென தமக்கு தெரியாதெனவும் அனுர பிரியதர்சன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.