துருக்கிக்கு செல்லும் சீனர்கள் குறித்து சீன அரசாங்கம் எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.
அண்மைக்காலத்தில் துருக்கிக்கு சென்ற சீனர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள உய்குவா முஸ்லீம் தரப்பினருக்கு எதிராக சீனா எடுத்து வரும் எதிர் நடவடிக்கைகளுக்கு எதிராக துருக்கியில் இந்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றும் முன்தினமும் துருக்கிய தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சீன தூதுவராலயத்திற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், துருக்கியில் உள்ள சீனர்களை தனியாக எங்கும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், அவசிய காரணத்திற்காக மட்டுமே இரவு நேரத்தில் வெளியே செல்லும்படி வேண்டப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சீன உத்தியோகபூர்வ ஊடகத்தின் மூலம், முஸ்லீம்கள் மற்றும் அவர்களது ஆன்மீக நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனாவில் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.