Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
07
கை நழுவிப்போன வாய்ப்பு - கவலையில் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினி...???

Rajinikanth #Cinema #Paapanasam - கை நழுவிப்போன வாய்ப்பு - கவலையில் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினி...???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

15,459 Views

          கை நழுவிப்போன வாய்ப்பு - கவலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி...???

 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில், கையில் கிடைத்த சிறப்பான கதை ஒன்றில் நடிக்கும் வாய்ப்பை கைநழுவ விட்டிருக்கிறார் ரஜினி. இவ்வாறு அவர் கைநழுவ விட்ட அந்தப்படம் தான் "பாபநாசம்".


 

 'உலகநாயகன்' கமலஹாசன் நடிப்பில் வெள்ளித்திரை கண்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப்படம், மலையாளத்தில் "த்ரிஷ்யம்" என்ற பெயரில் வெளிவந்த திரைப்படத்தின் கதைத் தழுவலாக, தமிழில் "பாபநாசம்" என்ற பெயரில் வெளியாகி அனைவராலும் பேசப்படும் படமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

 

மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழ்த் திரை ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட  நடிகர் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான "த்ரிஷ்யம்" மலையாளத்தில் செம ஹிட் அடித்தது. இந்தப்படத்தை இயக்குனர் ஜீத்து ஜோசெப் இயக்கியிருந்தார். மலையாள திரையுலகில் சரிந்து கிடந்த மோகன்லாலின் பெயரையும் தூக்கி நிறுத்தியிருக்கின்றது இந்தப்படம் என்றால் மிகையில்லை.

 

தற்போது கமல் நடிப்பில் வெளியாகியுள்ள "பாபாநாசம்" படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ஜீத்து ஜோசெப் தான் "த்ரிஷியம்" படத்தையும் இயக்கியிருந்தார். இந்தப்படத்திற்கான கதையும் இவருடையது என்பதால் தமிழிலும் இதனை இயக்க முடிவு செய்து முதலில் நம்ம 'சூப்பர்ஸ்டார்' ரஜினியிடம் தான் கதை சொல்லியிருக்கிறார். அவருக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் ஒரு சில காட்சிகள் அமையாததால் அவர் நடிக்க தயங்கியிருக்கிறார். அதன் பின்னரே கமல் இந்தப்படத்தில் நடித்தாராம்.

 

ரஜினி இந்த படத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்று ஜீத்து ஜோசப் கூறுகையில்,"இந்தக் கதையை சொல்லும்போது ரஜினிக்கு கதை  மிகவும் பிடித்திருந்தது. இருந்தாலும்  படத்தில் போலிஸ் கதாநாயகனை அடிப்பது போன்ற ஒரு முக்கியமான காட்சி கட்டாயம் வைக்கப்படவேண்டி இருந்தது. அதை எந்தக்காரணத்துக்காகவும் மாற்ற முடியாது. ஆனால், கதை சொன்னபோது, தன்னை அடிப்பது போல் படத்தில் காட்சிகள் இருந்தால் அதை தனது ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்று ரஜினி நினைத்தார். அதேபோல் கிளைமாக்ஸ் காட்சியையும் அவர் விரும்பவில்லை. அதேவேளை, ரஜினிக்காக காட்சியமைப்பில்  மாற்றமும் செய்ய முடியாது என்பதால் அவரது மறுப்பை ஏற்றுக்கொண்டேன்" என்கிறார் இயக்குனர் ஜீத்து ஜோசெப்.

 

இது இப்படியிருக்க, "பாபநாசம்" என்பது தமிழ் நாட்டிலுள்ள ஒரு பிரதேசத்தின் பெயர் என்பதும், படத்தில் அந்த பகுதிக்குரிய பேச்சு வழக்கிலேயே கமல்ஹசன் பேசி நடித்திருப்பதும் உங்களுக்கான மேலதிக கொசுறுத் தகவல்.

 

*S. G. R


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top