கொட்டாவையிலிருந்து - கொழும்பு கோட்டை நோக்கிப் பயணிக்கும் 138 மார்க்க பஸ்ஸொன்றின் நடத்துனர் இளைஞர்கள் சிலரால் மூர்க்கமாக தாக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
.
நுகேகொடையில் வைத்து பஸ்ஸில் யுவதிகள் , மற்றும் இளைஞர்கள் சிலர் ஏறியுள்ளனர். அவர்கள் கொழும்பு கோட்டைக்கு டிக்கெட் எடுத்துள்ளனர்.
இதன்போது இளைஞர்கள் சிலர் பஸ்ஸின் மிதிபலகையில் நின்றுள்ளனர்.
இதனைக் கண்ட நடத்துனர் அவர்களின் பாதுகாப்பு மற்றும் மற்றைய பயணிகளின் சௌகரியம் போன்றவற்றை கருத்தில் கொண்டு பஸ்ஸிற்குள் வரும்படி கூறியுள்ளார்.
இதனை அவர்கள் கேட்காமல் விடவே மீண்டும் ஒரு முறை கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே நடத்துனர் மற்றும் இளைஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் 'டவுண்டோல்' பிரதேசத்துக்கு அருகாமையில் தரிப்பிடமொன்றில் பஸ் நிறுத்தப்பட்ட போது நடத்துனரை வெளியே இழுத்து போட்ட இளைஞர்கள் அவரை மூர்க்கமாக தாக்கியுள்ளனர்.
பின்னர் தாக்குதலை நிறுத்த பஸ்ஸின் சாரதியும் முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி சம்பவத்தின் சிறு பகுதி அடங்கிய காணொளி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை பஸ்ஸின் பயணியொருவர் எமக்கு தந்தார். மேலும் குறித்த இளைஞர்கள் தங்களுடன் யுவதிகள் சிலரும் வந்ததால் அவர்களை ஈர்க்கும் பொருட்டு இவ்வாறு அளவுக்கதிகமாக செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.