இலங்கையின் அரசியல் குழப்பம் தற்போது பெருங் குழப்பமாக உள்ளது.
பரப்பளவில் பெரிய ஜனநாயக நாடுகளில் கூட இந்தளவு பரபரப்பு தேர்தல் காலத்தில் இருந்ததா? என்பது சந்தேகத்துக்குரியதாக உள்ளது.
ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்களோடு விடிகின்றது.
அந்தவகையில் இன்று வெளியாகியுள்ள தகவல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பானதாகும்.
ஆம், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் மைத்திரிபால சிறிசேன அதிலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகளுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில் ஜனாதிபதி இது தொடர்பில் விசேட உரையொன்றை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதிக்கு தமது கட்சியின் ஊடாக வேட்புமனு வழங்கியதையடுத்து மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளித்த கட்சிகளில் இருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையிலேயே ஜனாதிபதி , ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைமைப் பொறுப்புகளிலிருந்து பதவி விலகுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.