மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சாகல ரத்நாயக்கவின் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த நபர் ஒருவரை கடத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆறு ஆதரவளர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது சுவரொட்டிகளை ஒட்டுவதற்காக பயன்படுத்திய திரிவுந்து மற்றும் சுவரொட்டிகளும் கடத்தல் காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், சுவரொட்டிகள் மற்றும் திரிவுந்து என்பன அக்குரஸ்ஸ நகரில் மீட்கப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, பிலியந்தலை மருத்துவமனை சந்தி பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.