கொடுக்க மனசு உள்ளவர்களுக்கு கையில் பணம் இல்லை, கை நிறைய பணமுள்ளவர்கள் பலருக்கு கொடுக்க மனசு இல்லை. மாதாந்த வருமானத்தைக் கொண்டு, வாழ்க்கை வண்டியை ஓட்டிக்கொடிருப்பவர்கள் மத்தியில், உள்ளவரிடம் வாங்கி இல்லாதவருக்கு கொடுக்கும், குடிசை வீட்டு கோடிஸ்வரர் இவர்.
சீனாவில் பீஜிங் நகரிலுள்ள புகையிரத நிலையமொன்றில் யாசகராக இருக்கும் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், மாதம் ஒன்றிற்கு, இந்திய ரூபாவில் 99,000 ரூபாய் உழைக்கிறார் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இவர் யாசகம் செய்யும் பணத்தை, மாத இறுதியில் பிலாஸ்டிக் பையில் போட்டு தபால் நிலையத்திற்கு கொண்டு வந்து கொட்டி எல்லா பணத்தையும் தபால் நிலைய ஊழியர்களுடன் எண்ணி, முழுப்பணத்தையும் தன் சொந்த ஊருக்கு அனுப்புகிறார். தன் ஊரில் தனக்கென ஒரு வீடு கட்டியுள்ள இவர், அது தவிர 3 கல்லூரி மாணவர்களின் படிப்பு செலவுகளையும் கவனித்து வருகிறார். தன்னிடமுள்ள பணத்தை அப்படியே ஊருக்கு அனுப்பும் இவரின் மனசை பாருங்கள்.