காலிமுகத்திடலில் , புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஷெங்ரில்லா ஹோட்டலுக்கு முன்னாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மொரட்டுவையிலிருந்து- புறக்கோட்டை நோகிப் பயணித்த 100 இலக்க பஸ்ஸொன்றே 42 வயதான குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை மோதியுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான, ஹபராதுவை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.
வேகமாக வந்த குறித்த பஸ் வண்டி மற்றுமொரு வாகனத்தை முந்த முயன்ற வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி மற்றும் நட த்துனர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.