தேர்தல் பெறுபேறுகளின் படி பல முக்கிய அரசியல்வாதிகள் இந்தமுறை நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ளனர்.
அதன்படி, அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சராக இருந்த ரோஷி சேனாநாயக்க நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ளார்.
அதேபோல, திலங்க சுமதிபால, எஸ்.பி.திசாநாயக்க, பியசேன கமகே, விஜித் விஜயமுனி சொய்சா, லக்ஷ்மன் செனவிரட்ன, ஜகத் புஸ்பகுமார், லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, ஆகியோரும் இந்த பட்டியலில் அடங்குகின்றனர்.
அதேவேளை, ஜே.வி.பியின் சுனில் ஹந்துநெந்தி, முன்னாள் அமைச்சரான நந்திமித்ர ஏக்கநாயக்க மற்றும் ரோஹன திசாநாயக்க ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ளனர்.
இந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்ட சுரேஷ் பிரேமசந்திரன் இந்த முறை நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ளார்.
அத்துடன், நுவரெலிய மாவட்டத்தில் போட்டியிட்ட பி.ராஜதுரையும், திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட ஏ.எல்.எம்.அத்தாவுல்லாவும் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ளனர்.
பேராசிரியர் சரத் வீரசேகர , உதித் லொகு பண்டார , ரோஹித்த போகொல்லாகம, லக்ஷ்மன் செனவிரத்ன, நிரூபமா ராஜபக்ஷ, மஹிந்த சமரசிங்க, உபேக்ஷா சுவர்ணமாலி , பந்துபண்டார, பீலிக்ஸ் பெரேரா , ருவன் ரணதுங்க , துலிப் விஜேசேகர , சரத் குமார குணரத்ன ஆகியோரும் இம்முறை தோல்வியை தழுவியுள்ளனர்.