குறித்த பெண் தனது நோயுற்ற தாயாரை கவனித்துக்கொள்ளும் பொருட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
இரவு நேரத்தில் வீட்டின் வெளியே நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்கவே அப்பெண் தனது தாயுடன் , தீப்பந்தமொன்றுடன் வெளியே வந்து பார்த்துள்ளார்.
இதன்போது மறைந்திருந்த மர்ம நபரொருவர் அவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயன்றுள்ளார்.
இதனையடுத்து அப்பெண்ணின் தாயார் பொல்லொன்றால் அந்நபரைத் தாக்கவே அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
மேலும் பெண்களின் சத்தத்தைக் கேட்டு அயலவர்களும் ஒன்று கூடியுள்ளனர். சம்பவத்தின் போது பெண்கள் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர்.
பின்னர் தாயும் , மகளும் பொலிஸில் இது தொடர்பில் முறைப்பாடுசெய்துள்ளனர்.
இந்நிலையில் , குறித்த சந்தேகநபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் ஹெரோயினுக்கு அடிமையான 1 பிள்ளையின் தந்தை எனவும் , வயது 25 எனவும் தெரியவந்துள்ளது.