இந்தியாவில் கிரிக்கெட் பிரபலம் அடைந்த அளவுக்கு அங்கு கால்பந்தாட்டம் பிரபலம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.
இந்தநிலையில் அங்கு கிரிக்கெட் போன்று கால்பந்தையும் பிரபலமாக்கும் முனைப்பில் ISL "இந்தியன் சூப்பர் லீக்" கால்பந்து போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எந்த போட்டி தொடர் எதிர்வரும் 12 ம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20 வரை இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில் ஒரு கால்பந்தாட்ட அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் தோனியை அணியின் இணை உரிமையாளாராக்கும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. Bollywood நட்சத்திரம் அபிஷேக் பச்சன் உரிமையாளராகவுள்ள Chennaiyin FC என்ற கழகத்திற்கே தோனியை அணியின் இணை உரிமையாளாராக்கும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஏற்கனவே விராட் கோஹ்லி FC Goa அணிக்கும் ,முன்னாள் தலைவர் கங்குலி Atletico de Kolkata அணிக்கும், சச்சின் டெண்டுல்கர் Kerala Blasters அணிக்கும் இணை உரிமையாளர்களாக நியமிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.