இங்கிலாந்து பயிற்சியாளர் ஆண்டி பிளவர் மற்றும் விக்கெட் காப்பாளர் மட் பிரையர் ஆகியோர் சக வீரர்களை திட்டியும், அசிங்கப்படுத்தியும் மோசமாக நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டிய கெவின் பீட்டர்சன், இந்திய வீரர்களுக்கே இது நன்றாக்த் தெரியும் என்று கூறியுள்ளார்.
"மேற்கிந்திய வீரர்களைக் கேளுங்கள்,இலங்கை,அவுஸ்ரேலிய ,இந்திய வீரர்களைக் கேளுங்கள், , இந்தியர்களிடமிருந்து எனக்கு குறுஞ் செய்தி வந்தது. அதாவது நான் எப்படி இப்படிப்பட்ட வீரர்களுடன் விளையாடி வருகிறேன், நம்பமுடியவில்லை’என்று எனக்கு குறுஞ் செய்தி செய்துள்ளனர்.
சர்வதேச வீரர்களிடம் கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளாக இங்கிலாந்து வீரர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள் உங்களுக்கு நிச்சயம் நான் கூறியிருப்பதன் உண்மை தெரியவரும்”
என்று கெவின் பீட்டர்சன் தனது சுயசரிதை நூல் வெளியாவதை முன்வைத்து தி டெலிகிராப் பத்திரிக்கையில் இவ்வாறு கூறினார்.
தென்னாபிரிக்காவில் பிறந்த KP இங்கிலாந்து குடியுரிமை பெற்று அந்த அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர்,அணி தலைவராகவும் கடமையாற்றியவர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி KP என்ற இந்த குதிரையில் ஏறி சவாரி செய்த காலமும் இருக்கிறது.இப்படியிருக்க அவுஸ்ரேலிய அணிக்கெதிரான ஆஷேஸ் போட்டி தொடரில் இங்கிலாந்து மோசமான தோல்வியை தழுவ பலிக்கடாவாக்கப்பட்ட நபர் இந்த KP மட்டுமே.
இவரது சுயசரிதை நூல் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களால் சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறார். சர்சைகளால் பேசப்பட்ட கெவின் இப்போது இங்கிலாந்து ஊடகங்களின் தலைப்பு செய்தி ஆகிவிட்டார்.
இவரது இந்த கருத்துக்கள் தொடர்பில் தெரிவித்த முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் ஸ்வான் பல விடயங்களை சொல்லியுள்ளார். இவருக்கு யார் நல்லவர்,யார் கெட்டவர்,யாரெல்லாம் இவருக்கு உதவினார்கள் என்பதை மறந்து கருத்துரைக்கிறார் என்று விசனம் வெளியிட்டுள்ளார்.
உண்மையில் விக்கெட் காப்பாளர் மட் பிரையர் இவர் அணியில் இருக்க வேண்டும் என்று விரும்பியவர் என்றும் ஸ்வான் குறிப்பிட்டுள்ளார்.
எது எவ்வாறாயினும் தான் தென்னாபிரிக்காவை விட்டு வந்தது மிகப்பெரும் தவறு என்றும்,அதுதான் தன் சந்தோசம் பறி போனதற்கு காரணம் என்ற கருத்தையும் KP முன்வைக்க தவறவில்லை.
காலம் கடந்த ஞானமும் காலம் கடந்த விசாரணைகளும் கவைக்கும் உதவாது அவைக்கும் உதவாது.