இதுவரை கொலையாளி யார் என வெளியுலகத்திற்கு தெரியவரவில்லை.
பலரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
ஆரம்பத்தில் சிறுமியின் தந்தை மீது சந்தேகம் ஏற்பட்ட போதிலும் அவர் அக்கொலையை செய்யவில்லையென்பது பொலிஸாரால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இக்கொலை தொடர்பில் சிறுமியின் தந்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
தமது கிராமத்தில் தம்முடன் இருக்கும் ஒருவரே இதனை புரிந்துள்ள தாக தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தனியொருவருக்கு மேலதிகமாக சிலர் இதனுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இந்த சிறுமி கொலை தொடர்பில் மூன்று பேர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படு வருகின்றனர்.
இதேவேளை, அதில் ஒருவருக்கும் பிள்ளைகள் இருப்பதாகவும் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கப்போவதில்லையெனவும் சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.