விஷாலும் யுவன் சங்கர் ராஜாவும் இப்போதும் நல்ல நண்பர்கள்தான்.
விஷாலின் இப்போது வெளிவந்துள்ள படமான பூஜைக்கும் யுவன்தான் இசை ஆனால் விஷால் - சுந்தர் சி கூட்டணியில் உருவாகும் ஆம்பள படத்திலிருந்து விலகி இருக்கிறார் யுவன்.
அவருக்குப் பதில் ஐந்து இசையமைப்பாளர்கள் அந்தப் படத்துக்கு இசையமைக்கின்றனர்.
இந்த வெளியேற்றத்துக்கான காரணம் தெரியவில்லை. சுந்தர்.சிக்கும் யுவனுக்கும் ஒத்துப் போகவில்லை என்கிறது உள்வட்டாராம். இத்தனைக்கும் சுந்தர்.சியின் பல படங்களுக்கு இசையமைத்தவர் யுவன்.
ஐந்து இசையமைப்பாளர்கள் இப்போது ஆம்பள படத்தின் இசையமைப்பாளர்களுள் ஒருவராக ஹிப் ஹாப் தமிழா ஆதி அறிமுகமாகிறார். ரஹ்மானின் உதவியாளர் ஒருவரும் இசையமைக்கிறார். மேலும் 3 புதிய இசையமைப்பாளர்களையும் இந்தப் படத்தில் அறிமுகம் செய்கிறார் சுந்தர்.சி.
முதன் முதலாக தமிழ் சினிமாவில் 5 இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் வசந்த் அடுத்ததாக இயக்குநர் பார்த்திபன் தன் கதை திரைக்கதை வசனம் இயக்கத்திலும் 5 இசை அமைப்பாளர்களைப் பயன்படுத்தினார். இதே போல ராகவா லாரன்ஸ் இயக்கும் முனி 3-ம் பாகமான கங்காவிலும் 5 இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர்.
இப்படியே போன ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு இசையமைப்பாளர் என்ற நிலை வந்துரும் போல ம்ம்ம்ம்……