இது தொடர்பில் தெளிவான விளக்கத்தை பெற்றுக்கொள்ளும் பொருட்டு சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி பிரதீபா மஹநாமஹெவாவிடம் இது தொடர்பில் நாம் வினவியிருந்தோம்.
இவ்விவகாரம் தொடர்பில் அவர் அளித்த விபரங்கள் வருமாறு:
ஆபாச காட்சிகளை வைத்திருப்பது தொடர்பில் 1927 ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க ஆபாசமான வெளியீடுகள் கட்டளைச் சட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன் 2005 ஆம் ஆண்டில் இதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
பிரதீபா மஹநாமஹெவாவின் கருத்துப்படி இவற்றை விற்றல் , பகிர்தல் , ஒலி மற்றும் காட்சி வெளியிடுதல் மேலும் வெளியிடுதலுக்கு உதவிபுரிதல் ஆகியன தண்டனைக்குரிய குற்றமாகும்.
குறிப்பிட்ட சில இணையத்தளங்களை பார்ப்பதற்காக ஒருவரை கைதுசெய்யமுடியாது. பார்வையிடுதல் குற்றமாக கருதப்படுவதில்லை. அவை பொதுவாக இணையத்திலிருந்து தணிக்கை செய்யப்படுவதில்லை.
ஆபாச விடயங்களை பகிர்தல் அல்லது ஊடகத்தினூடாக வெளியிடுதல் தொடர்பான ஆதாரமிருப்பின் ஒருவரைக் கைதுசெய்யமுடியுமென அவர் தெரிவிக்கின்றார்.
திருத்திய தண்டனைச்சட்டக் கோவை பிரிவு 286அ (1995 இல. 22 பிரிவு) இன் படி இவற்றை ஒலியாகவோ , காணொளியாகவோ பதிவுசெய்தல் , வாடகைக்கு விடல் , விநியோகித்தல் , செல்வாக்குசெலுதல் அல்லது யாரையேனும் ஆபாசமான எதேனும் விடயம் தொடர்பில் ஈடுபடுத்தல் குற்றமாகும். ஆனால் பார்ப்பது குற்றமல்ல.
அவ்வாறான காட்சிகளை வைத்திருப்பதற்கான காரணம் கண்டறியப்படவேண்டும் ஆனால் இது தொடர்பில் கட்டளைச்சட்ட த்தில் குறிப்பிடப்படவில்லை.
நிர்வாணம் உள்ளடங்களான காட்சிகள் பகிரப்படுமாயின் அவை வழக்கின் போது ஆதாரமாக உபயோகப்படுத்தப்படமுடியும்.
18 வயதுக்கு குறைந்த ஒருவர் இவற்றை பார்க்கும்போது பிடிபட்டால் , பிள்ளையின் பாதுகாவலருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட முடியும்.