ஒகே கண்மணி படத்தில் நாயகன் துல்கரின் நண்பராக நடித்த பிரபு லஷ்மன் இன்று காலமானார்.
இன்று அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரபு லஷ்மன், தனியார் கல்லூரி ஒன்றின் துணைத் தலைவராகவும் உள்ளார். ஓகே கண்மணி படத்தில் அவர் துல்கரை 'Buddy' என அழைப்பார். அதுவே அவருடைய அடையாளமாக மாறிப்போனது.
இதனால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்துக்கு buddy prabhu என்றே பெயர் வைத்துள்ளார்.
பிரபு லஷ்மணின் மரணத்துக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Shocked to hear about Buddy Prabhu's sudden and untimely passing. Was truly a buddy to me & everyone he met. Chennais lost its best buddy :(
— dulquer salmaan (@dulQuer) November 5, 2015