கரோத்தே வீரர் வசந்த சொய்சா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.எப் லொக்கா எனப்படும் இரோன் ரணசிங்க உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அநுராதபுரம் பிரதான நீதிமன்றில், நேற்று இந்த வழங்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே காவல்துறையினர் நீதிமன்றில் இதனை தெரிவித்தனர்.
அத்துடன், இந்த குற்றச்செயலுக்கு சந்தேகத்திற்குரியவர்கள் பயன்படுத்தி முகக்கவசம் அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்குமாறும், சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட தடிகளை மேலதிக பரிசோதனைக்காக பேராதனை தாவரவியல் தேசிய பூங்காவின் பணிப்பாளரின் சோதனையின் பொருட்டு அவரிடம் பொறுப்பளிக்குமாறும் நீதவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.