தெலுங்கு,தமிழ் என தென்னிந்தியாவின் இரண்டு திரையுலகிலும் முன்னணி நாயகியாக இருப்பவர்
நடிகை சமந்தா. "பானா காத்தாடி" திரைப்படத்தின் மூலம் தமிழில் முதல் தடம் பதித்தவர். அந்தப்படத்தின் வெற்றியின் மூலம் பேசப்படும் நடிகையானதோடு, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான் உள்பட பல படங்களில் நடித்ததோடு தற்போது விஜய்யின் "கத்தி" திரைப்படத்திலும் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கும்நிலையி
ல், விரைவில் சினிமாவை விட்டு விலகவுள்ளதாக கூறியுள்ளார்.
பொதுவாக சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளிடம் திருமணம் பற்றிய பேச்சு எடுத்தாலே போதும், திட்டுக்கல் பூட்டு ஒன்றை வாங்கி இறுக்கி பூட்டி வைச்சிடுவாங்க.ஆனால் சமந்தாவோ,தனது திருமணம் பற்றி திருவாய் மலர்ந்திருக்கிறார். இன்னும் மூன்று வருடங்களுக்குள் தான் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளாரா
ம்.'குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் செய்து கொள்வதுதான் நல்லது. அப்போதுதான் எனது குழந்தைகளையும் நல்லபடியாக வளர்க்க முடியும்' என அதற்காக ஒரு காரணமும் சொல்லியிருகிறார்.யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பதை மட்டும் அவர் சொல்லவே இல்லையாம்.
இது இவ்வாறிருக்க, தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்துவரும் நடிகர் சித்தார்த்துடன் சமந்தா சில வருடங்களாகவே காதலாகி,கசிந்து உருகுவதாக கிசு கிசு வெளியாகியிருந்தது. அதை உண்மையாக்குவது போல,இருவரும் காளஹஸ்தி கோவிலுக்கு ஒன்றாக தம்பதிகள் போல சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த சாமிதரிசனத்தின் மூலம் தமது காதலை உலகுக்கு மறைமுகமாக சொல்லியிருப்பதாகவும் திரையுலகில் ஒரு பேச்சு.
"கத்தி" படவெளியீடு பிரச்சனையில் உள்ள நிலையில், "ஐ" படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் "பத்து எண்ணுவதற்குள்ளே" படத்தில்
சமந்தா நாயகியாக நடிக்கிறாராம்.
எது எப்படியோ....? கத்தி படம் சமந்தாவுக்கும் நிறையவே கற்றுக்கொடுத்திருக்கும் போல......
சமந்தாவின் அழகிய தோற்றங்கள் சினி நியூஸ்:கணேசமூர்த்தி ராகவன்