தாஜூதீன் கொலை வழக்கில் சாட்சியங்களாக சீ.சீ.டிவி காணொளிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார்.
மேலும் முக்கிய புள்ளிகள் சிலரும் சீ.சீ.டிவி காணொளிகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு விசாரணையில் பொலிஸார் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கொலை 2012 ஆம் ஆண்டு கொலை இடம்பெற்ற காலப்பகுதியிலேயே சீ.சீ.டிவி காணொளிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இவை திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என நீண்டநாட்களாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை அழிந்த சீ.சீ.டிவி காணொளிகளை மீட்பதற்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் உதவி நாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கொழும்பில் பிரதான இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டிவி கமெராக்களின் பதிவுகளையும் பொலிஸார் ஆராய்ந்து வருகின்ற போதிலும் அக்காணொளிகளை யாரும் இவ்வளவு நாட்களுக்கு வைத்திருப்பதில்லையெனவும், அவற்றை உடனுக்குடன் அழித்து விடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.