பிரபல பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன் மாரடைப்பு காரணமாக டெல்லியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கடந்த 6 ஆம் திகதி திடீரெனமாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது உடல்நிலை தேறி வருவதாக சங்கர் மகாதேவன் ட்வீட் செய்துள்ளார்.
"என் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. கடவுளின் ஆசீர்வாதத்தாலும், திறமையான மருத்துவர்களாலும், நான் தற்போது மீண்டு வருகிறேன். நான் வருவதற்காக காத்திருங்கள்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
அவருக்கு அடுத்தடுத்து இரு முறை மாரடைப்பு ஏற்பட்ட தாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.