பங்களாதேஷ் நாட்டில் பேஸ்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பாதுகாப்பு கருதி வட்ஸ்அப் தடை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரின் போது போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் பொதுச் செயலாளர் அலி அசான் மொஹமட் முஜாகித் மற்றும் பங்களாதேஸ் தேசியவாத கட்சி தலைவர் சலாவுதீன் காதர் சவுத்ரி ஆகியோருக்கான தூக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இவர்களது தூக்கு தண்டனை காரணமாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கும் சூழ்நிலை நிலவியது. இதன் காரணமாக அங்கு பேஸ்புக் தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த தடையை இன்று நீக்கியிருப்பதாக அந்நாட்டு தொலைதொடர்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக வாட்ஸ்அப், வைபர் போன்றவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவில்லை.