வீரம், வேதாளம் படத்தையடுத்து அஜீத் நடிக்கும் 57வது படத்தையும் சிவா இயக்குகிறார்.
வேதாளம் பட ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட காயத்தையடுத்து காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அஜீத்குமார் தற்போது ஓய்வில் இருக்கிறார்.
வெளிநாடு சென்று பிசியோதெரபி சிகிச்சை பெற எண்ணி இருந்த அஜீத் தற்போது அந்த திட்டத்தை கைவிட்டிருக்கிறார்.
மேலும் 1 மாதம் வீட்டிலேயே ஓய்வு எடுக்கிறார்.அஜீத் நடிக்கும் புதிய படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவும், 2016ம் ஆண்டு தீபாவளி தினத்தில் படம் வெளியிடவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அஜீத் ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வில் மும்முரமாக இருக்கிறார் இயக்குனர்.