நீண்ட காலம் தல 55 என்ற பெயரோடு எப்போது பெயர் வைப்பார்கள் என்று காத்திருந்த கௌதம் வாசுதேவ மேனனின் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்துக்கு "என்னை அறிந்தால்" என்ற பெயர் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெயர் பற்றி பல்வேறு கருத்துக்கள் எல்லாத் தரப்பு ரசிகர்களாலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
வழமையாக 'அஜித்'படங்கள் ஒற்றை வார்த்தையில் வருவது அண்மைக்கால வழக்கம்.
பில்லா, ஏகன், மங்காத்தா, ஆரம்பம், வீரம் என்று..
ஆனால் கௌதம் தன் படப்பெயர்களில் ஒரு கவிதைத் தன்மை வருமாறு பார்த்துக்கொள்வார்..
முதல் படம் மின்னலே..
அதன் பின்னர் அநேகமாக இரு வார்த்தைகள்..
காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், பச்சைக்கிளி முத்துச்சரம்
சில வேளைகளில் வித்தியாசமாக..
ஆனால் கவிதை விளையாடும்...
விண்ணைத் தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம்
இம்முறையும் அஜித்தின் படப்பெயர் ரசிகர்கள் எதிர்பார்க்கும் 'மாஸ்' லெவலில் வரும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும்,
'என்னை அறிந்தால்' என்ற பெயர் கௌதம் வாசுதேவ மேனனின் கவிதை இயல்போடும், 'தல' அஜித்தின் இமேஜுக்கு ஏற்றது போலவும் இருப்பதாக இன்னொரு தரப்பு அஜித் ரசிகர்கள் பெருமைப் பட்டுக்கொள்கின்றனர்.
இதேவேளை நேற்று நள்ளிரவு வேளை பெயர் அறிவிக்கப்பட முதலே ட்விட்டர் தளமெங்கும் #thala55 என்ற hashtag உலக அளவில் பேசப்பட்டது. (worldwide trending)
நள்ளிரவு 'என்னை அறிந்தால்' பெயர் அறிவிக்கப்பட்ட முதல் #YennaiArinthaal என்பதும்
#MakeWayForTHALA55TitleWithFL என்பதும் லட்சக்காணக்கான ட்வீட்ஸ் உடன் உலகம் முழுதும் trend ஆகியிருக்கிறது.
தளபதியின் கத்தி அலை கலக்கிக்கொண்டிருக்கும் நேரம் போட்டிக்கு தலயின் "என்னை அறிந்தால்" களமிறங்கி இருக்கிறது.
சுவையான, விறுவிறுப்பான போட்டி பார்ப்போம்.
இன்று சற்று நேரத்துக்கு முன்னர் First Look Poster கலக்கலாக வெளியாகியுள்ளது.
என்னை அறிந்தால்..வெளியானது அஜித்தின் #YennaiArinthaal first look!! அடுத்து teaser எப்படி வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.
- சினி CID