தனது தந்தையான சச்சின் டெண்டுல்கரை அவதூறாக பேசிய நண்பனை சச்சினின் மகன் அர்ஜுன் பலத்த குத்துவிட்டு காயப்படுத்தியுள்ளார்.
இது இப்போது நடந்த விடயமல்ல.
2007 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நடந்தது.
இதில் இந்தியா இலங்கையிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து விலகியது.
இதன்காரணமாக இந்திய ரசிகர்கள் மாத்திரமன்றி அர்ஜுனும் கோபமடைந்திருந்தார்;
இந்த போட்டியில் அப்பா சச்சின் எந்தவிதமான ஓட்டத்தையும் பெறாமல் ஆட்டமிழந்திருந்தமையால் இன்னும் வேதனைக்கு தள்ளப்பட்டிருந்தார்.
இயற்கையிலேயே அர்ஜுன் கோபக்காரர் என்பதனால் அப்பா டக் அவுட் ஆனமை பற்றி பேசினால் கோபப் படக் கூடாது என்று அம்மா அஞ்சலி கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.
இருந்தும் அர்ஜுனின் நண்பன் ஒருவர் சச்சின் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்தமை பற்றி கிண்டலடித்து பேசியிருந்தார்.
ஆத்திரமடைந்த அர்ஜுன் சரமாரியாக குத்து விட்டுள்ளார்.
சச்சின் தனது சுயசரிதை புத்தகத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது மகனுக்கு 7 வயது தானாம்.
இன்னும் பல சுவாரஸ்யங்களை சச்சினின் சுயசரிதை தந்துள்ளது.