இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன், இன்று யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
நான்கு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு நேற்றைய தினம் மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கை வந்திருந்தார்.
நேற்று அவர் வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்படி இன்று யாழ்ப்பாணம் செல்லும் அவர், அங்கு வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திப்பதுடன், யுத்த பாதிப்புக்கு உள்ளான மக்களையும் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருகோணமலை மாவட்டத்துக்கும் அவர் விஜயம் செய்யவுள்ளார்.
அதேநேரம், இன்றையதினம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரையும் மனித உரிமைகள் ஆணையாளர் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா பிரேரணையின் அமுலாக்கம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காகவே அவர், இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.