Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
20
கார் கொத்து தெரியுமா? - கொலைவெறி கொத்து இது..

car trouble - கார் கொத்து தெரியுமா? - கொலைவெறி கொத்து இது..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

211 Views
கார் ஸ்டார்ட் ஆகாவிட்டால் நம்ம ஊர்ல எல்லாம் என்ன செய்வோம்? நான்கு, ஐந்து பேர் சேர்ந்து தள்ளி ஸ்டார்ட் செய்வோம். ஆனால் இங்க ஒருத்தர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

இத்தாலியைச் சேரந்த ஸ்பார்டாகோ என்பவர், தனியார் நிறுவனமொன்றில் கணக்காளராக வேலை செய்பவர். இவர் அலுவலகத்திற்கு தினசரி தாமதமாகத் தானாம் போய் சேருவார். இதற்கான முக்கிய காரணம், பொது போக்குவரத்தில் அலுவலகம் செல்வது தான் என தானே முடிவுசெய்து கொண்டு, புதிய காரொன்றை சில தினங்களுக்கு முன் கொள்வனவு செய்துள்ளார்.

மகிழ்ச்சியாக தனது சொந்த வாகனத்தில் வேலைக்கு செல்ல ஆரம்பித்த ஸ்பார்டாகோவின் சந்தோஷம் நிலைக்கவில்லை.

இரு தினங்களுக்கு முன் வழமை பொலவே, அலுவலகம் செல்ல தன் வாகனத்தில் அவசரமாக ஏறியுள்ளார். ஆனால் இவரின் அவசரத்திற்கு வாகனம் இயங்கவில்லை. வாகனம் ஸ்டார்ட் ஆகவில்லை என்றதும் டென்ஷனாகிவிட்டார். கோபம் அதிகரிக்க, செய்வதறியாது.. வீட்டிற்குள் சென்று கோடரி ஒன்றை கொண்டு வந்து கொத்தோ கொத்து என்று காரை கொத்திவிட்டார். எப்படி கொத்தியுள்ளார் என்பதை இந்த படம் உங்களுக்குச் சொல்லும்.



பிரியமானவர்களிடம் தானே கோபத்தைக் காட்ட முடியும். நான் அதை தான் செய்தேன் என்று பொலிசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார் ஸ்பார்டாகோ. இதற்கு மன அழுத்தம் தான் காரணம் என்பதை உணர்ந்து கொண்ட ஸ்பார்டாகோவின் உறவினர்கள் இவரை ஒரு மனநல வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். கூடிய விரைவில் பூரண சுகம் பெற வேண்டுமென்பதே ஸ்பார்டாகோவின் குடும்பத்தினரின் பிரார்த்தனை.

சில சமயங்களில் நம்முள் எத்தனையோ பேர் இப்படித்தான் நடந்துகொள்கிறோம். அதிகமாக கோபப்படுகிறோம், வெறுப்பை வெளிப்படுத்துகிறோம், எரிச்சலடைகிறோம் என எமக்கே தோன்றுமாக இருந்தால். உடலக்கும், மனதிற்கும் ஓய்வு தேவை என்பதை உணர்ந்துக் கொள்வோம்.

தொகுப்பு
ர. பிரவீனா.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top