4வயது சிறுவனை கல்விக்காக இலங்கைக்கு அனுப்பிய ஜப்பான்.
ஜப்பானிய தம்பதியினர் 2013ம் ஆண்டு ப்ரவரி மாதம் முதல்
இலங்கையில் வசித்துவந்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் தாய் தன் குழந்தையுடன் சொந்த நாட்டுக்கு திரும்பினார். மீண்டும் இலங்கை வருவதில்லை என்ற முடிவுடனே சென்றுள்ளார்.
குழந்தை, இலங்கை பாடசாலையில் கல்வி கற்று வந்துள்ளது.
இதனால் கல்வியை தொடர்வதற்காகவும் பாதுகாப்பு குறித்தும் தந்தை வழக்கு தொடர்ந்ததை அடுத்து, நான்கு வயது ஆண் பிள்ளையை இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு ஜப்பான நாட்டின் ஒசாகா மாவட்ட குடும்ப நீதிமன்றம் நேற்று பிள்ளையின் தாய்க்கு உத்தரவிட்டுள்ளது.
பிள்ளையின் தந்தை இலங்கையில் வாழ்ந்து வருவதால், குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகள் கடத்திச் செல்லப்படுவது தொடர்பான ஹேக் இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ள , இந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஜப்பானில் வழங்கப்பட்ட முதலாவது தீர்ப்பு இதுவெனவும் குறிப்பிட்டுள்ளது.
- வர்ஷி-