வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னாள் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண், தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
23 வயதான அவருக்கு 7 மணித்தியால சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. எவ்வாறாயினம், அவரது கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். வெலிக்கடை சிறையில் உள்ள கைதி ஒருவரை சந்தித்து விட்டு திரும்பும் வேளையில், அவர் மீது இந்த துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. உந்துருளி ஒன்றில் பிரவேசித்த ஒருவர், அவரை 'சமயங்' என்பாரின் மனைவியா? என்று விசாரித்துவிட்டு, இந்த தாக்குதலை நடத்தியதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது