Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
07
பல்வேறு மர்மங்களை விட்டுச் சென்றுள்ள கலாபவன் மணியின் மரணம் (படங்கள்)

Kalabhavan Mani's death - பல்வேறு மர்மங்களை விட்டுச் சென்றுள்ள கலாபவன் மணியின் மரணம் (படங்கள்)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

57,751 Views
பிரபல நடிகர் கலாபவன் மணி கடந்த சனிக்கிழமை தனது சொந்த ஊரான சாலக்குடி அருகே  சேனத்து நாடு என்ற இடத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.

இதை பார்த்ததும் அவருடன் இருந்த அவரது முகாமையாளர் மற்றும் கார் சாரதி ஆகியோர் கலாபவன்மணியை சாலக் குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மருத்துவர்கள் அறிவுரை படி கொச்சி திடப்பள்ளியில் உள்ள அமிர்தா மருத்துவமனைக்கு கலாபவன்மணி மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவரது சிறுநீரகம், இதயம், கல்லீரல் போன்றவை பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு நடிகர் கலாபவன்மணி மரணம் அடைந்தார்.

மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் கலாபவன்மணி உடலில் விஷம் கலந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால் கலாபவன்மணி மரணம் பற்றிபொலிஸிற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

நச்சுத்தன்மையுள்ள அமிலம் அவருடைய உடலில் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதைதொடர்ந்து  பொலிஸார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையில் கலாபவன்மணியின் தம்பி ராதாகிருஷ்ணன்  பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டில் தனது அண்ணன் கலாபவன்மணி மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இதுபற்றி பொலிஸார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


    

இதைதொடர்ந்து கலாபவன்மணி உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு இன்று காலை கலாபவன் மணியின் பிரேத பரிசோதனை இடம்பெற்றது.

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தபிறகுதான் அவரது மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கலாபவன்மணி உடலில் விஷம் கலந்திருப்பதாக கூறப்படுவதால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகமும் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடைபெறுகின்றதாம்.



நடிகர் கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக முறைப்பாடு எழுந்துள்ளதால் அவர் மயங்கி விழுந்த பண்ணை வீட்டுக்கு பொலிஸார் சீல் வைத்துள்ளனர். அங்கு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 

நேற்று பண்ணை வீட்டில் கலாபவன் மணியுடன் தங்கியிருந்த ஒரு நடிகர் உள்ளிட்ட 5 நபர்களை காவல்துறை விசாரித்துள்ளனர்.

இதேவேளை பிரபலங்கள் கலாபவன் மணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.




Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top