காற்பந்து வீரர்களான லியோனல் மெசி மற்றும் கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ ஆகியோரில் யார் சிறந்தவர் என்ற விவாதத்தினால் ஏற்பட்ட மோதலில் காற்பந்து ரசிகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நைஜீரியாவைச் சேர்ந்த 21 மற்றும் 34 அகவைகளை உடைய இரண்டு பேர் மும்பையில் உள்ள விடுதியில் வைத்து, இந்த விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதை அடுத்து, அங்கிருந்த கண்ணாடி ஒன்றை உடைத்து காற்பந்து ரசிகர் ஒருவர், மற்றொருவரை தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளானவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார்.