இலங்கையின் தேசிய மலர் மாற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய மலராக இதுவரையில் நீலோற்பலம் எனப்படும் நீல அல்லி மலர் கருப்பட்டது. எனினும் இனிமேல் அல்லி மலரே இலங்கையின் தேசிய பூவென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரியல் பல்வகைமை செயலகத்தின் பணிப்பாளர் பத்மா அபோகோன் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்காக அமைச்சரவை அந்தஸ்த்து கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நீலோற்பலம் எனப்படும் நீல அல்லி வெளிநாட்டைச் சேர்ந்த மலர் என்பதால், அல்லி மலரை இலங்கையின் தேசிய மலராக கொள்ள தீர்மானிக்கபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.