புத்தாண்டையொட்டி எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் தினங்களில் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும் என மது வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
13,14 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் உள்ள மதுபான விற் பனை சாலைகள் அனைத்தும் மூடப்படும். அத்தோடு இதனை மீறி
சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபடுவோரை கைதுசெய்வதற்காக விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.