இதனை பார்த்ததும் தனது காரை நிறுத்திய சூர்யா, தனது உதவியாளர் மற்றும் டிரைவர் உதவியுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவன், மனைவியை தூக்கி தனது காரில் ஏற்றி சித்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். டாக்டர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு பெண்ணுக்கு பலத்த அடிபட்டு இருப்பதாகவும் அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் சூர்யாவிடம் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை வசதி திருப்பதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில்தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளனர். உடனடியாக நகரியில் வசிக்கும் நடிகை ரோஜாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய சூர்யா, திருப்பதி மருத்துவமனையில் உள்ள குறிப்பிட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரிடம் பேசி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி கூறியுள்ளார்.
ரோஜாவும் டாக்டரிடம் பேசி அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். பின்னர் சூர்யா தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வேன் ஏற்பாடு செய்து கணவன்- மனைவியை திருப்பதி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளார். விபத்தில் சிக்கிய கணவன் மனைவிக்காக ஒரு மணி நேரத்துக்கு மேல் அவர் மருத்துவமனையிலேயே இருந்து விட்டு பின்னர் அங்கிருந்து ஓட்டலுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சூர்யாவை மனதார பாராட்டுவோம்!
=====கோடாம்பாக்க கிழவி====