இயக்குனர் களஞ்சியத்தோடு முறுகல், சித்தியோடு சிக்கல், கொஞ்ச நாள் தலைமறைவு, இப்படி பல்வேறு சிக்கல்களில் சிக்கி சின்னாபின்னமாகி தலைமறைவாக வாழ்ந்துவந்த அஞ்சலி மீண்டும் தமிழிலேயே களம் குதித்தார்.
ஜெயம்ரவியின் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக இணைந்துகொண்டு, தன் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த அஞ்சலிக்கு புதுப்படங்கள் கைமேல் கிடைக்கத் தொடங்கின.
அகப்பட்டவரைக்கும் ஆதாயம் என்றபடி, சத்தமில்லாமல் அத்தனை படங்களிலும் ஒப்பந்தமாகி தன் 'திறமையை' காட்டத் தொடங்கினார் அஞ்சு!
இப்பொழுது நம்ம சினிமாக்காரர்கள் எல்லாம் புழுங்கும் ஒரு கதை காதுக்கு எட்ட, சட்டென திரும்பி செவி கொடுத்தால் விஷயம் வேற மாதிரி இப்போது கசியத் தொடங்கியிருக்கிறது.
அதாவது, இந்த அங்காடித்தெரு தந்த அஞ்சலிப் பாப்பாவுக்கு ஆளாளுக்கு அபாரமான பரிசுகளை அள்ளி வீசுகிறார்களாம்.
கார் பங்களா, இரத்தினம் முத்து வைரம் பவளமென ஆக்மார்க் அசத்தல் பரிசுகளாம் அத்தனையும்!
ஆஹா..!!
அடிச்சுது அஞ்சலிக்கு அதிஷ்டம்னு ஆஹ்னு பார்க்கும் மக்கள் தொகை அதிகமாகி இருக்கிறது.
பலர் நேரடியாக பொறுக்க முடியாமல் கேட்டிருக்கிறார்கள். '' இது அவர் தந்த பரிசுதானே..'' அதற்கும் புன்னகையோடு விடைபெற்ற அஞ்சலி, தன் அடுத்த கட்டம் நோக்கி பவ்யமாக அடியெடுத்து வைக்கிறார்.
- புள்ள பொளைச்சுக்கும்பா....