நல்ல விடயங்களை மீண்டும் மீண்டும் செய்தியாக வெளியிடுவதில் என்ன தவறு இருக்கப்போகின்றது.
ஆம் , 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் நினைவு கூறலே இது.
அமெரிக்காவின் அலபாமாவில் இடம்பெற்ற மனதை உருக்கும் சம்பவமே இது.
அங்கு பெண்ணொருவர் , தனது குடும்பத்திற்கு உணவளிக்க 5 முட்டைகளை திருடி விட்டார்.
இதைக் கண்டுபிடித்த பொலிஸ் அதிகாரி வில்லியம் ஸ்டெசி , அப் பெண்ணை கைதுசெய்யவில்லை.
மாறாக அப்பெண்ணுக்கு ஒரு பெட்டி நிறைய முட்டைகள் மற்றும் உணவினை வழங்கி ஆறுதல் படுத்தியிருந்தார்.
இச்செய்தி தீ போல் பரவ வே மற்றைய பலரும் தங்களால் முடிந்த உதவியை செய்ய அப்பெண்ணுக்கு நிறைய உதவிகள் கிடைத்திருந்தன.