தேசிய விருதுக்குப் பிறகு நடித்தால் ஹீரோ மட்டும்தான் என விடாப்பிடியாக இருந்தவர் நடிகர் பாபி சிம்ஹா.
அதனால் அவருக்கு சிலப் படங்களில் நாயகனாக நடிக்கவும் வாய்ப்புக் கிடைத்தது.
ஆனால் அப்படி பாபி சிம்ஹா நடித்த எல்லாப் படங்களும் சறுக்கலை மட்டுமே சந்தித்து வருகிறது. அதனால் விரைவில் உள்ள கோ-2 படத்தை முழுதாக நம்பியிருக்காராம்.
அத்தோடு, இனி கேரக்டர் பவர்ஃபுல்லா இருந்தா போதும், ஹீரோ இருக்கணும் என்கிற அவசியமில் இல்லை என நட்பு இயக்குனர்களிடம் சொல்லத் தொடங்கியிருக்காராம்.
இதைக் கேள்விப்பட்டு அவரோட நட்பு வட்டாரத்தில் இருக்கும் சில நடிகர்களே, பாபி சிம்ஹாவ கிண்டல் செய்றாங்களாம்.