20 வயதான மொஹமட் ஆஷிக் என்ற இளைஞனே இவ்வாறு கட த்தப்பட்டுள்ளார்.
அவரது தந்தை கோடீஸ்வர வர்த்தகர் எனவும் , மகன் பாடசாலைக்கல்வியின் பின் தந்தையின் வியாபாரத்தை ஏற்று நடத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளை நிற காரில் வந்த கும்பலொன்றே கடத்தலை மேற்கொண்டுள்ளது.
பின்னர் கட த்திய கும்பல் 20 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியுள்ளது.
முதலில் , வர்த்தகரின் மூத்த மகனை அழைத்து கப்பத்தை கோரியுள்ளது நபர்கள் , தராவிடின் சகோதரனை கொலை செய்வதாகவும் கூறியுள்ளனர்.
பின்னர் வர்த்தகரை நேரடியாக தொடர்பு கொண்டு கப்பமாக பணம் மற்றும் நகைகளை கோரியுள்ளது.
பின்னர் , பணம் மற்றும் நகையுடன் மூத்த மகன் சென்றுள்ளபோதிலும் அவர்கள் குறிப்பிட்ட இடங்களில் யாரும் இருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு மூன்று தடவை , மூன்று இடங்களில் நடந்துள்ளது.
பின்னர் தனது 4 ஆவது மகன் தொடர்பில் தகவல் கிடைக்காமையால் வர்த்தகர் வாரியபொல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் சி.சி.டிவி காணொளிகளின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.