பெண்ணொருவரோடு ஏற்பட்ட மோதலையடுத்து இளைஞனொருவன் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்ட சம்பவமொன்று மொரட்டுவையில் இடம்பெற்றுள்ளது.
அவர்களுக்கிடையில் என்ன பிரச்சினை இடம்பெற்றது என தெரியவரவில்லை.
எனினும் இருவருக்கிடையிலான வாய்த்தர்க்கத்தின் பின்னரே இளைஞன் தீ மூட்டிக்கொண்டுள்ளார்.
பின்னர் அவ்விட த்தில் இருந்தவர்கள் இளைஞனை காப்பாற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் அங்கிருந்து தனது ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு செல்ல முற்பட்ட குறித்த யுவதியை , அப்பிரதேசவாசிகள் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.