நீண்ட நாட்கள் திரையில் தன்னைக் காட்ட விரும்பாத பாடும்நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம், இப்பொழுது மகன் சரணின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.
படத்தின் கதையும் அது சொல்ல வருகின்ற கருத்துக்களும் தன்னை கவர்ந்துள்ளதால் தான், தான் நடிக்க அமோதித்ததாக கூறுகிறார் இந்த கம்பீரப் பாடகன்.
தம் திறமைகளை இந்த உலகத்துக்கு நிரூபிக்க முற்படும் இரண்டு இளைஞர்களின் கதைதான் இந்த மூணே மூணு வார்த்தை !
இதில் அர்ஜுன் மற்றும் ''சுட்ட கதை'' புகழ் வெங்கி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களோடு படத்தின் உயிரோட்டமான பாத்திரத்தில் பாடும்நிலாவும் லக்ஷ்மியும் நடிக்கிறார்கள். இவர்களும் படத்தின் வெற்றிக்கும் யதார்த்ததிற்கும் முக்கியமானவர்களாய் தோன்றுகிறார்கள் என்கிறார் கதையை இயக்கம் இயக்குனர் மதுமிதா!
புதியவர்களை களமிறக்கியுள்ள இந்தப் படத்தின் மொத்த நம்பிக்கையும் கதைதான் என்று சொல்லப்படுகிறது.
#சினிமாத்தனமில்லாது வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்