"கம்முன்னு சும்மா இருங்க சொந்த வாழ்கையை பற்றி யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய தேவை எனக்கில்லை என பதில் உரைக்கின்றார் நம்ம பிரியாமணி...
கண்களால் கைது செய் படத்தின் மூலம் அறிமுகமாகி பருத்திவீரனில் தேசிய விருது பெற்றவர் பிரியாமணி. இவருக்கும் தொழிலதிபர் முஸ்தபா ராஜ்க்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விரைவில் இருவரும் தங்களது திருமணத் தேதியை அறிவிக்கவுள்ளனர். இந்நிலையில் என்னுடைய சொந்த வாழ்வு குறித்து நான் யாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டியதில்லை என பிரியாமணி கூறியிருக்கிறார்.