இறுதிச்சுற்று படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங் .
இப்படத்தில் அவரின் நடிப்பு எல்லோராலும் பேசப்பட்டது. மேலும் முதல் படத்திலேயே சிறப்பு தேசிய விருதினை ரித்திகா சிங் தட்டிச் சென்றார்.
இதனால் கோலிவுட் டைரக்டர்கள் தங்களது படத்தில் ரித்திகா சிங்கை கதாநாயாகி ஆக்குவதில் குறியாக இருந்தனர். இந்நிலையில் இயக்குனர் மணிகண்டன் இயக்கும் புதிய படத்தில் ரித்திகா சிங் நடித்து வருகிறார்.
இதில் நாயகனாக வரும், விஜய் சேதுபதி குறித்து கூறுகையில், அவரது சீரியசனா முகத்தை பார்த்து முதலில் நடுங்கிவிட்டதாகவும், பின்னர் தான் முகம் சீரியஸாக இருந்தாலும் நகைச்சுவையாக பேசுவதை புரிந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழ் கற்பதற்காக விஜய் சேதுபதி நிறைய டிப்ஸ்-களை அள்ளித் தருவதாகவும் நெகிழ்கிறார்.