ஹோட்டலொன்றில் வைத்து தகராறில் ஈடுபட்ட தாக க் கூறப்படும் இலங்கை அணி வீ ரர்களான கித்ருவன் வித்தானகே , ரமித் ரம்புக்வெல்ல ஆகியோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அவர்கள் இருவரும் பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் வைத்து தகராறில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி இருவரும் இலங்கை ‘ஏ’ அணியின் சார்பில் இங்கிலாந்து தொடரில் விளையாட இருந்தனர்.
இந்நிலையில் , ஹோட்டல் தகராறு தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடைபெறுமென இலங்கை கிரிக்கெட் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தை மிக பாரதூரமானதாக கருதுவதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.