வயிற்று வலி எனக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி குழந்தையொன்றை பிரசவித்த சம்பவம் நாவலப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது.
15 வயதான குறித்த சிறுமி ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.
மகள் வயிற்றுவலியால் அலறவே தந்தை அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
இதன்போது, அவர் குழந்தையொன்றை பிரசவித்துள்ளமையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் விசாரணைகளின் போது அவர் கடையொன்றில் வேலை பார்த்துள்ளதாகவும் , அதன்போது அங்கு நபரொருவருடன் பழகியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் , அந்நபரின் கையடக்கத்தொலைபேசி இலக்கம் தவிர எந்த விபரங்களும் குறித்த சிறுமிக்கு தெரியாது என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.