இரத்தினபுரி , குருபேவிலகமவில் தாய் மற்றும் 13 வயதான அவரது மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
37 வயதான குறித்த தாய், தனது கணவன் உயிரிழந்த பின் வேறொரு ஆணுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
மேலும் அவரது பிள்ளைகள் இருவர் பாட்டியுடன் வேறு வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
குறித்த பெண் , தனது காதலனாலேயே கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அக்காதலன் தற்போது தலைமறைவாகியுள்ளார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் கணவன் 2003 ஆம் ஆண்டு குழுவொன்றினால் கொல்லப்பட்டுள்ளார்.
அதற்கு நட்ட ஈடாக அப்பெண்ணுக்கு 3 இலட்சம் நட்ட ஈடும் கிடைத்துள்ளது. பிள்ளைகளுக்கு 1 இலட்சம் வீதம் வங்கியில் வைப்புச் செய்த அப்பெண் ,மிகுதியை தனது செலவுகளுக்காக வைத்திருந்துள்ளார்.